பொன் மொழிகள் ...
பொன் மொழிகள் 1 ...
படித்ததில் பிடித்தது...
• பள்ளியில்
ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு, “ஜாதிகள் இல்லையடி பாப்பா” சொல்லும்போதே, படிப்புக்கும், வாழ்கைக்கும் சம்பந்தம்
இல்லை என்று புரிகின்றது..
• பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ.. ஒரு பருக்கை
சோற்றைக் கூட தராது.. உழைச்சா தான் சோறு..
• ஒரு பெண்
சிரிக்கும்போது, அழகாக
இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண், அதை விட அழகாக
தெரிவான்..
• ஒரு பெண் உன்னிடம் தன்
பிரச்சனையை சொல்கிறாள் என்றால், அதற்காக அவள், அவர்களை குறை
கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. உன்னை முழுமையான நம்புகிறாள் என்று அர்த்தம்..
• ஒருவர் உங்களிடம்
ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு
ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு
அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை
துரோகம் என்ன இருக்கு..
• எழுதி
வைத்துகொள்ளுங்கள், பல
அடுக்கு மாடி கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யும் நாள் வரும், வெகுவிரைவில்..
• உயிரை கொடுத்தாலும்
திரும்ப கிடைக்காதது, “நேரம்”.. அந்த நேரத்தை
ஒருவருக்காக செலவழிக்கும் முன், அவர் அதற்கு
தகுதியானவரா, என
ஆராய்வது நல்லது..
• சுதந்திரம் இல்லாத
காலத்தில், வெள்ளைக்கார
கவர்னர்களையேகூட எதிர்த்து தைரியமாக குரல்கொடுக்க முடிந்த நம்மால், சுதந்திரம் பெற்றபிறகு, ஒரு வார்டு கவுன்சிலரை
பார்த்துக்கூட எதிர்த்துக்குரல் கொடுக்க முடியவில்லையே, ஏன்?
• “கவலைப்படாதே” என்பதை விட, “நான் பார்த்துக்கிறேன்” என்பதே, சிறந்த ஆறுதல்..
• இன்று உன்னால்
சிரித்தவர்கள், நாளை
உனக்காக அழுதால், நீ
வாழ்ந்த வாழ்கை அர்த்தமானது..
• இறந்தவருக்கு சிலை
வைப்பதற்கு பதிலாக, பசியோடு
இருப்பவருக்கு, இலை
வையுங்கள்..
• “ஏமாத்திட்டாங்க”ளேன்னு வருத்தப்படாம, “இவர்களைப் போய்
ஏமாத்திட்டோ”மேன்னு
வருத்தப்பட வைக்கிற மாதிரி வாழனும்..
• நம்ம கூட இருந்த
ஒருத்தர், நமக்கு
துரோகம் “பண்ணிட்டாங்க”ன்னு, கூட இருக்க மத்த
எல்லோரையும் சந்தேகப்பட்டா, வாழ்வில்
நிம்மதி இருக்காது..
• குத்திக்காட்டும்
மனிதர்க்கும், சுட்டிக்காட்டும்
மனிதர்க்கும், இடையில்
சிரித்து செய்து வாழ்ந்தாலே, பெரும் சவால்..
• அடுப்பு கல்லு உள்ளே
இருந்தால், உயர்தர
ஹோட்டல்.. வெளியே இருந்தால், சாதா ஹோட்டல்.. இவ்வளவு
தான் வாழ்கை..
• தெருவில் கிடக்கும்
காகிதமாக, யாரையும்
வெறுக்காதே.. நாளை அது பட்டமாக பறந்தால், நீ அவர்களை நிமிர்ந்து
பார்க்க நேரிடும்..
• வாழ்க்கையில் எல்லாம்
கிடைக்கும், என்று
எதிர்பார்க்காதே.. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது..
• உறவு என்பது ஒரு கோவில், அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை
கழட்டிவைத்தல் நலம்.
• நாம் தேடிச்செல்வோரை
விட, நம்மை
தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..
• வேலை செய்பவரின், பணம் தான் நம்
கண்ணுக்கு தெரிகிறது.. அவர்களின் உழைப்பும், கஷ்டமும் நம் கண்ணுக்கு
தெரிவதே இல்லை..
• யாரோ ஒருவரின்
நிராகரிப்புக்காக வருந்தாதீகள்.. யாரோ ஒருவரால் நிராகரிப்பு, ஒருவரால்
நேசிக்கப்படுகின்றது..
• பயண இருக்கையிலும், வேலை நிறுவனங்களிலும்
(அரசியல்) வயதானவர்களுக்கே முதலிடம்.. இளைஞர்களுக்கு இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------
பொன் மொழிகள் 2
* ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.
* ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.
* மகிழ்ச்சியை
விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக்
கொண்டிருப்போம்.
* அவசரமாக கல்யாணம்
செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.
* உனக்கு நிறையத்
தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்.
* கண்ணெதிரே காணும்
ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது
மிகவும் அபாயகரமானது.
* நம்முடன் வாழ்வோரைப்
புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
* அவசரமாகத் தவறு செய்வதை
விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
* மறக்க வேண்டியவைகளை
நினைத்து வருந்துவதும், நினைக்க
வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
* தோல்வியை
ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய
இருக்கிறது.
* பணம் மட்டுமே
வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி
அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல - விவேகானந்தர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பொன் மொழிகள் 2
--------------------------------------------------------------------------------------------------------------------------
பொன் மொழிகள் 2
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment