free on line job

காதல் கவிதைகள்



என் அன்பு கணவா... 

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்... 

நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது...

இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்கு தெரியாது...

ஆனால்... என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்...

ஏனென்றால்... இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கிறான்...

நான் தான் உன் அன்பு மனைவி...
என் அன்பு கணவா...

நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல் செய்து கொண்டு இருக்கலாம்...
அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்...
பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்...

கவலை படாதே என் உயிரே...
அது என் பிராத்தனையாக கூட இருக்கலாம்...
இறைவனால் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது....

நீ எத்தனை பெண்களை உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்ப மாட்டார்கள்...

எந்தப் பெண்ணும் உன்னை நேசிக்க மாட்டாள்...

நான் உனக்காக பிறந்தவள்...

கவலைபடாதே... என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்...

உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்...

அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை...

உன் அழகும் வேண்டாம்...

உன் பணமும் வேண்டாம்...

நியாய, தர்மத்திற்கு கட்டுப்பட்ட நல்ல ஆணாக இருந்தால் போதும்...

கவலைப்படாதே... உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்...

உன் எதிர் காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்...

உன் அருகில் இப்பொழுது நான் இல்லை...

ஆனால்... என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்...

மரணம் என்ற ஒன்றை தவிர...


எங்கிருக்கிறாய்..??? உனக்காகவே என்னை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்...

நமக்கு 100 குழந்தைகள் பிறந்தாலும், உன் மேல் வைத்த காதல் குறையாது, ஏன் தெரியுமா நீ தான் என் முதல் குழந்தை..

உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்...

நீயும் நானும் சந்திக்கும் அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதியிருக்கான்..??? காத்திருக்கிறேன்...


என் அன்பு கணவா...

கலங்காமல் நீயும் காத்திரு...

இப்படிக்கு... உன் எதிர் கால உன் உயிர் மனைவி... .

_______________________________________________________________________


அன்பே... 
என்னை முதன் முதலில் 
நேசித்தவளும் நீதான்... 

என்னில் முதன்முதலில் 
நான் சுமந்தவளும் நீதான்... 

பாதை இல்லாத கானகத்தில் 
திசை தெரியாத பறவை நான்... 

துடிக்கும் என் இதயம் 
ஊமையாகிவிட்டது... 

நீ என்னை 
அந்த பிரிந்த நிமிடம்... 

வலிகளோடு சொல்கிறேன்... 

முயற்சி செய்தும் முடியவில்லையடி 
உன்னைவெறுக்க... 

உன்னை நேசித்திருந்தால் 
நான் மறந்திருக்கலாம்... 

உன்னை நான் சுவாசிக்கிறேனடி 
எப்படி மறக்க முடியும் உன்னை... 

என்னோடு நீ வாழவேண்டாம் 
என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு... 

நான் வாழும்வரை 
என் வாழ்விற்கு அதுபோதுமடி... 

உதிர்ந்துவிட்ட 
என் வாழ்வில்... 

உன் நினைவுகள்தான் 
எனக்கு சிறு வெளிச்சமடி...

வைத்துகொள்கிறேன் உன் 
நினைவுகளை என்னோடு மட்டும்..... 
--------------------------------------------------------------------------------------------------------------------------------
     உயிரே... 


தினம் தினம் நான் உன் 

நினைவுகளோடு உறங்குவதால்... 


கனவுகள் பல வந்து செல்லுதடி 

என் உறக்கத்தில்... 

நாம் கைகோர்த்து 

நடப்பது போன்றும்... 

என் தோளில் நீ 

சாய்ந்திருப்பது போன்றும்... 

நீ என்னோடு சிரித்து 

பேசுவது போன்றும்... 

தினம் தினம் என் உறக்கத்தில் 

உன் கனவுகள்தானடி... 

கனவுகள் கலைந்துவிடும் 

என்று தெரிந்தே காண்கிறேனடி... 


நீ என் காதலை 

ஏற்காத போதும்... 

என்னை காணும்போது மட்டும் 

நீ நலம் விசாரிபப்து ஏனடி... 

அதனால் என்னவோ உன் நினைவுகள் 

என்னை தொடருதடி.....


--------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                     
 --K.MOHAMED THARIK ...



No comments:

Post a Comment